என்னதான் பெண்கள் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதுமாக இருந்தாலும் பெண்களின் பாதுகாப்பு என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பெண்கள் பெரும்பாலும் அவர்கள் பாதுகாப்பை அவர்களே உறுதிசெய்துகொள்ளும் நிலையில்தான் இருக்கிறார்கள். எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்கள். அப்படியும் மீறி ஆபத்தில் சிக்கிக் கொள்கிற பெண்களுக்கு சில ஸ்மார்ட் போன் ஆப்ஸ் உதவிக்கரம் நீட்டுகின்றன.
ஃபைட் பேக் (fight back)
இந்த ஆப்ஸ் நீங்கள் ஏதாவது ஆபத்தில் மாட்டிக்கொண்டால் உங்கள் குடும்பத்தினருக்கு பேஸ்புக் மூலமாக எச்சரிக்கை செய்யும். ஒரே ஒரு பட்டனை அழுத்தியவுடன் ஜிபிஎஸ், எஸ்எம்எஸ், மேப்ஸ் போன்ற பல்வேறு வசிதகளைப் பயன்படுத்தித் தகவல்களை அனுப்பும்.
ஐ ஃபாலோ (I follow)
நாஸ் காம் விருது வாங்கியிருக்கும் இந்த ஆப்ஸ், மொபைலை மூன்று முறை அசைத்தால் 5 நொடிக்குள் ஆட்டோமேடிக் வாய்ஸ் காலை உங்களுக்கு வேண்டியவருக்கு அனுப்பிவிடும். ஒருவேளை அந்த நபர் அழைப்பை ஏற்கவில்லையென்றால் உங்கள் எமர்ஜென்சி தொடர்பில் இருப்பவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும். இதில் நீங்கள் மூன்று நபர்களைத் தொடர்புகளாக இணைத்துக்கொள்ளலாம்.
நிர்பயா (nirbhaya app)
இந்த ஆண்ட்ராய்டு ஆப்ஸ், ஆபத்து நேரத்தில் நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய எஸ்ஓஎஸ் செய்திகளை உங்கள் நண்பர்களின் மொபைல்களுக்கும், அவர்களின் பேஸ்புக் பக்கங்களுக்கும் அனுப்பும்.
ஸ்கிரீம் அலார்ம் (Scream alarm)
பட்டனை அழுத்தியவுடன் ஒரு பெண்ணின் குரல் மிகுந்த சத்தத்துடன் கேட்கும். இது உங்களைத் தாக்க வருபவரிடம் இருந்து உங்களைக் காப்பாற்றும்.
சென்டினல் (sentinel app)
ஐபோன் 5 - க்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆப்ஸ், உங்கள் ஸ்மார்ட் போனை உடைத்துவிட்டால்கூட உங்கள் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பும். நீங்கள் ஆபத்தில் இருக்கும்போது எஸ்எம்எஸ், மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள் மூலம் உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் இருக்கும் இடம் குறித்த தகவலுடன் அனுப்பிவைக்கும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago