கொழும்புக்கு தென்கிழக்கில் சர்வதேச கடல் எல்லையில் தத்தளித்துக் கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 7 பாய்மரத் தோணி மாலுமிகளை இலங்கை மீனவர்கள் மீட்டனர்.
வெள்ளிக்கிழமை தூத்துகுடியிலிருந்து இருந்து மாலத்தீவுக்கு சரக்கு ஏற்றி பாய்மரத் தோணி சென்று கொண்டிருந்தது. கொழும்புக்கு தென் கிழக்கே 28 நாட்டிகலில் சர்வதேச கடல் எல்லையில் தோணி சென்று கொண்டிருந்த போது வானிலை மாற்றம் காரணமாக கடலில் மூழ்கியது. அதில் பணியாற்றிய 7 மாலுமிகளும் உயிர்காக்கும் படகில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை அந்தப் பகுதியில் மீன்பிடிக்க வந்த இலங்கையின் நாட்டுப்படகு ஒன்று 7 மாலுமிகளையும் மீட்டு காலி கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
காலி முகாமில் இலங்கை கடற்படை வீரர்கள் தூத்துக்குடி மாலுமிகளுக்கு முதலுதவி அளித்து உணவு, உடைகள் அளித்தனர். விசாரணைக்கு பின்னர் இந்திய தூதரக அதிகாரிகளிடம் மாலுமிகள் ஒப்படைத்தனர்.
இலங்கை மீனவர்களால் மீட்கப்பட்ட தூத்துக்குடி மாலுமிகள் ஒரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
ஓடிடி களம்
36 mins ago
இந்தியா
14 mins ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago