ஆட்சியை கலைக்கும் ஒரு சிலரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: முதல்வர் பழனிசாமி

By செய்திப்பிரிவு

ஆட்சியை கலைக்கும் ஒரு சிலரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

இது தொடர்பாக இன்று சேலத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதாவது:

''ஆட்சியை கலைக்கும் ஒரு சிலரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. எத்தனை தடைகள் வந்தாலும் தொண்டர்களின் ஆதரவுடன் அதை எதிர்கொள்வோம். எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும் அதை தகர்த்தெறிவோம்.

எவ்வளவோ பிரச்சினைகள் வந்தாலும் தொண்டர்களின் ஆதரவுடன் அதிமுக ஆட்சி தொடரும். அடிமட்ட தொண்டனும் விசுவாசமாக இருந்தால் அதிமுகவில் உயர் பதவியை அடையலாம். அதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. இரட்டை இலை சின்னம் விரைவில் மீட்கப்படும்

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர உள்ளதால் அனைவரும் மக்கள் பணியாற்ற வேண்டும்.கல்வியை மையப்படுத்தியே நாட்டின் வளர்ச்சி உள்ளது, தமிழகத்தில் உயர் கல்வி பயில்பவர்கள் எண்ணிக்கை 44% ஆக அதிகரித்துள்ளது'' என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்ட நிலையில் முதல்வர் பழனிசாமி இவ்வாறு பேசியுள்ளது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 mins ago

ஜோதிடம்

27 mins ago

வாழ்வியல்

32 mins ago

ஜோதிடம்

58 mins ago

க்ரைம்

48 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்