அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அதிமுக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து அதிமுக வழக்கறிஞர்கள் தரப்பு அளித்த பேட்டியில், "அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ்பாபு, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன் மூலம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எந்த வித தடையும் இல்லை என்றும் உத்தவிட்டுள்ளார் " என்று தெரிவிக்கப்பட்டது.

வாசிக்க | அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

உலகம்

22 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

38 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்