கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் மழையால் காய்கறிகள் வரத்து அதிகரித்து, கோயம் பேடு சந்தையில் காய்கறி விலை குறைந்துள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையைப் பொறுத்தவரை, கர்நாடக மாநிலம் மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்து காய்கறிகள் அதிக அளவில் வருகின்றன. தமிழக பகுதிகளில் இருந்து குறைந்த அளவே வருகின்றன. அதனால் அண்டை மாநிலங்களில் நிலவும் வறட்சி மற்றும் மழை அடிப்படையிலேயே காய்கறி வரத்தில் மாற்றம் ஏற்படுகிறது.
காய்கறி வரத்தில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிர்ணயிக் கப்படுகிறது.
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த வறட்சி காரணமாக கோயம் பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வந்தன. தக்காளி விலை ரூ.90 வரையும், வெங்காயம் ரூ.50 வரையும், பீன்ஸ் ரூ.80 வரையும் உயர்ந்து இருந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால், காய்கறி விளைச்சல் அதிகரித்து, கோயம்பேடு சந்தைக்கு வரத்தும் அதிகரித் துள்ளது.
தக்காளி கிலோ ரூ.24
நேற்றைய நிலவரப்படி, கோயம்பேடு சந்தையில், தக்காளி கிலோ ரூ.24 ஆக குறைந்திருந்தது. இது கடந்த வாரம் ரூ.45-க்கு விற்கப்பட்டது. அதேபோல கத்திரிக்காய் ரூ.35-லிருந்து ரூ.25 ஆகவும், அவரை ரூ.55-லிருந்து ரூ.25 ஆகவும், பாகற்காய் ரூ.20-லிருந்து ரூ.15 ஆகவும், பீட்ரூட் ரூ.26-லிருந்து ரூ.20 ஆகவும் குறைந்துள்ளன.
மேலும் வெங்காயம் ரூ.24, சாம்பார் வெங்காயம் ரூ.95, உருளைக்கிழங்கு, புடலங்காய் தலா ரூ.15, வெண்டைக்காய் ரூ.20, முட்டைக்கோஸ் ரூ.11, கேரட் ரூ.30, முருங்கைக்காய் ரூ.28, பச்சை மிளகாய் ரூ.25 என விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
23 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago