தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இரு நாட்களை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு முறை மிதமான மழை பெய்யக்கூடும்'' என்று பாலசந்திரன் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 mins ago
வணிகம்
32 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
42 mins ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
15 mins ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago