தமிழகத்தில் ஜப்பான் தொழில் நகர அறிவிப்பு: மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஜப்பான் தொழில் நகரம் அமைக்கப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டுக்கான ஜப்பான்-இந்திய நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கே. பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில், ''கடந்த செப்டம்பர் 14-ம் தேதி காந்தி நகரில் நடந்த இந்திய-ஜப்பான் வணிக முன்னோடிகள் ஃபோரம் நிகழ்ச்சியில் தமிழகத்தில் ஜப்பான் தொழில் நகரம் அமைக்கப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டுக்கான ஜப்பான்-இந்திய நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அறிவிப்புகளையும் வெளியிட்டதற்கு தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்புகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதுடன், நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்'' என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

3 mins ago

வலைஞர் பக்கம்

43 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்