தமிழகத்தில் ஜப்பான் தொழில் நகரம் அமைக்கப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டுக்கான ஜப்பான்-இந்திய நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கே. பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில், ''கடந்த செப்டம்பர் 14-ம் தேதி காந்தி நகரில் நடந்த இந்திய-ஜப்பான் வணிக முன்னோடிகள் ஃபோரம் நிகழ்ச்சியில் தமிழகத்தில் ஜப்பான் தொழில் நகரம் அமைக்கப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டுக்கான ஜப்பான்-இந்திய நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு அறிவிப்புகளையும் வெளியிட்டதற்கு தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்புகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதுடன், நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்'' என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
3 mins ago
வலைஞர் பக்கம்
43 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago