சென்னை: தமிழகத்தில் தொன்மையான 146 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் மாநில அளவிலான 52-வது வல்லுநர் கூட்டம், இணை ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் திருவையாறு ஜனமுக்தீஸ்வரர், சுவாமிமலை காசி விஸ்வநாதர், திருப்பூர் மாவட்டம் செட்டிப்பாளையம் செல்லாண்டியம்மன், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நகர் சொக்கலிங்க சுவாமி, காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பாங்குழி ஆதிகேசவ பெருமாள், செங்கல்பட்டு மாவட்டம் பொன்மார் செல்வவிநாயகர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரயிலடி பக்த ஆஞ்சநேய சுவாமி உள்ளிட்ட 146 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
37 mins ago
தமிழகம்
43 mins ago
இந்தியா
55 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
3 hours ago