தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) அண்மையில் நடந்து முடிந்தது. இத்தேர்வு முடிவுகள் ஜூன் 8-ல் வெளியாகிறது.
ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், "நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு முடிவுக்காக காத்திருக்கிறோம். குடியரசுத் தலைவர் ஒப்புதலை எதிர்பார்த்து இருப்பதாலேயே இன்னும் மருத்துவப் படிப்பு விண்ணப்பங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மத்திய அரசின் முடிவுக்குப் பின்னரே மருத்துவ விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
க்ரைம்
15 mins ago
தமிழகம்
12 mins ago
கல்வி
20 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
2 hours ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
3 hours ago