பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு 80 ஆயிரத்தைத் தாண்டியது. ஆன்லைனில் பதிவுசெய்ய மே 31-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
தமிழகத்தில் 571 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படு கின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 1-ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே 4,786 மாணவர்கள் பதிவுசெய்தனர்.
ஆன்லைன் பதிவு தொடங்கிய 14-வது நாளான ஞாயிற்றுக்கிழமை நிலவரப் படி 77 ஆயிரத்து 410 பேர் ஆன்லைனில் பதிவுசெய்திருந்தனர். நேற்று நிலவரப்படி ஆன்லைன் பதிவு 80 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் இந்துமதி தெரிவித்தார். ஆன்லைனில் பதிவுசெய் வதற்கு கடைசி நாள் மே 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்து தேவையான ஆவணங்களுடன் ஜூன் 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
6 hours ago
வாழ்வியல்
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
இந்தியா
9 hours ago