கிருஷ்ணகிரி அருகே வேலம்பட்டியில் கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே வேலம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ நேற்று பிரபுவின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பிரபுவின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்த மற்றொரு ராணுவ வீரர் பிரபாகரன் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் , நாகரசம்பட்டி பேரூராட்சித்தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
8 mins ago
கல்வி
22 mins ago
சினிமா
30 mins ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
34 mins ago
விளையாட்டு
50 mins ago
வாழ்வியல்
59 mins ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
2 hours ago