ரூ.1,500 கோடி மதிப்புள்ள அரசு பங்குகள் ஏலம் மூலம் விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ரூ.1,500 கோடி மதிப்புள்ள அரசுப் பங்குகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ரூ.1,500 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த ஏலம், இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை கோட்ட அலுவலகத்தில் வரும் 9-ம் தேதி நடைபெறும்.

போட்டி ஏலக் கேட்புகள் அன்றைய தினம் முற்பகல் 10.30 மணியில் இருந்து பகல் 12 மணி வரையிலும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 11.30 மணியில் இருந்து 11.30 மணி வரையிலும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்'' என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்