தி.மலை முத்துமாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் தரிசனம்: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், தை மாதம் நடைபெறும் திருவிழாவில் பொங்கலிட்டு வழிபடவும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் வழிபாடு செய்ய, பிற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
முத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், பொங்கலிட்டு வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் பட்டியலின மக்கள் வலியுறுத்தினர். அவர்களுக்கு ஆதரவாக இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் ஒரு சில அமைப்புகள் குரல் எழுப்பியது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பட்டியலின மக்கள் மனு அளித்திருந்தனர். அதில், முத்துமாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும், தை மாத விழா காலங்களில், எங்களது சமூகத்துக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
3 hours ago