மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கீழ வெண்மணியில் 54-ம் ஆண்டு தியாகிகள் தினம்

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கீழ வெண்மணியில் உள்ள வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 54-ம் ஆண்டு தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.மாரிமுத்து தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, தியாகிகள் நினைவுத்தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, தொழிற்சங்க நிர்வாகிகள், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக அரசு, பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

6 mins ago

உலகம்

48 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

11 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

உலகம்

12 hours ago

வாழ்வியல்

12 hours ago

மேலும்