அதிமுக பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற சசிகலா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, நேற்று ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அவர் சோகத்தோடு அஞ்சலி செலுத்தினார்.
தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அன்று இரவே, தமி ழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன் னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால், கட்சியின் பொதுச் செய லாளர் பதவி இன்னும் காலியாகவே உள்ளது. அதிமுகவில் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் என்றாலும், கட்சி விதிகளின்படி, போட்டியின்றி ஒருமனதாகவே பொதுச் செயலாளர் தேர்ந் தெடுக்கப்படுகிறார். அதன்படி, 1988-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 7 முறையாக கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவே தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொதுச் செயலாளர் பதவி மிகவும் அதிகாரம் வாய்ந்தது என்பதால், அப்பதவியைக் கைப் பற்ற சசிகலா தீவிர முயற்சியி்ல் இறங்கியுள்ளார். இதற்காக, முதல்வர் ஓபிஎஸ், தம்பிதுரை எம்.பி. மற்றும் அமைச்சர்களுடன் கடந்த 3 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்ட செய லாளர்களில் பலர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் தேர்வான வர்கள். எனவே, அவர்களில் பலரும் சசிகலாவுக்கு ஆதரவாகவே இருப் பதாக தெரிகிறது. ஆனால், ஒன் றிய, கிளைச் செயலாளர்கள் என அடிமட்ட நிர்வாகிகளிடமும், தொண் டர்களிடமும் சசிகலாவுக்கு அவ்வள வாக ஆதரவு இல்லை. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங் களிலும் சசிகலா எதிர்ப்பு கருத்து களையே அதிகம் காண முடிகிறது.
இதையெல்லாம் மீறி, பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் சசிகலா, கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் தன் மீதான ஆதரவு அலையை உருவாக்கு மாறு அமைச்சர்கள், எம்எல்ஏக் கள், நிர்வாகிகளிடம் அவர் கூறியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர, மத்திய பாஜக அரசின் காய் நகர்த்தல்களை சமாளிப்பது, அதிமுகவை திமுக உடைக்காமல் கவனமாக இருப் பது, உள்கட்சியில் இருக்கும் உடைப்பு முயற்சிகளைத் தடுப்பது, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை முன்னிறுத்தி செய் யப்படும் முயற்சிகளை முறியடிப் பது உள்ளிட்டவை குறித்தும் சசிகலா விரிவாக ஆலோசனை நடத்தியுள்ள சசிகலா, இப்பணிகளை தனக்கு நெருக்கமானவர்களிடம் ஒப்படைத் திருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் சசி கலா நேற்றும் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்த பிறகு, ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும் தனது குடும்பத்தினருடன் சசிகலா வந்து அஞ்சலி செலுத்தினார். சசிகலா நேற்று மிகுந்த சோகத்துடன் காணப்பட்டதும், ஜெயலலிதாவை வணங்கியதுபோல மிகவும் பவ்யமாக அவருக்கு அமைச்சர்கள் வணக்கம் தெரிவித்ததும் குறிப் பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago