காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற முதல் குழு திரும்பியது: பாஜகவினர் உற்சாக வரவேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: உ.பி.யில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நவம்பர் 17-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் இருந்து மொத்தம் 2 ஆயிரத்து 592 பேர் பங்கேற்க உள்ளனர்.

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க,4-வது குழுவாக 83 பேர், ராமேசுவரத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் செல்லும் விரைவு ரயிலில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்துநேற்று பயணம் செய்தனர். அவர்களை பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், எம்.சக்கரவர்த்தி, துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்ற முதல் குழுவினர் 216 பேர் சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்தடைந்தனர். அவர்களுக்கு பாஜ நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

காசி தமிழ் சங்கமம் பயணம் மேற்கொண்ட அனுபவம் குறித்துசிலர் கூறுகையில், "எங்களது வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இந்த பயணம் இருந்தது. சிறப்பான ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்