சென்னை: புவி ஆய்வுக்கான இஓஎஸ்-06 (ஒசோன்சாட்-03) செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் நவ. 26-ம் தேதி காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்த ராக்கெட்டில் ஒசோன்சாட் தவிர்த்து அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட், துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட், பூட்டான் சாட், பிக்சலின் ஆனந்த் உள்ளிட்ட 8 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளன.
ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்டவுன் நவ. 25-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்வையிட அனுமதி தரப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://lvg.shar.gov.in/ என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
3 mins ago
விளையாட்டு
8 mins ago
க்ரைம்
13 mins ago
வணிகம்
30 mins ago
தமிழகம்
34 mins ago
சுற்றுலா
38 mins ago
இந்தியா
41 mins ago
இந்தியா
48 mins ago
கல்வி
51 mins ago
கல்வி
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago