விபத்தில் ஆலடி அருணாவின் சகோதரர் பேத்தி பலி

By செய்திப்பிரிவு

துவரங்குறிச்சி அருகே நடை பெற்ற விபத்தில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் சகோதரர் பேத்தி இறந்தார்.

சென்னை ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் கலைவாணன் (52). முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் சகோதரர் வைகுண்டனின் மகனான இவர், மருத்துவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு தனது மனைவி பாலாம்பிகை (48), மகள்கள் பிரியதர்ஷினி (26), ஆதிரா (24), பிரியதர்ஷினியின் மகள் அத்வைதா (2) ஆகியோருடன் சென்னையிலிருந்து காரில் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்துக்கு புறப்பட்டார். கலைவாணன் காரை ஓட்டினார். துவரங்குறிச்சி அருகே முக்கன்பாலம் பகுதியில் சென்றபோது திடீரென சாலை மையத்தடுப்பில் மோதிய கார், எதிர்புற சாலைக்குச் சென்று பக்கவாட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பிரியதர் ஷினி, கலைவாணன், பாலாம் பிகை, அத்வைதா ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பிரியதர்ஷினி இறந்தார்.

பிரியதர்ஷினி மருத்துவராக பணியாற்றி வந்தார். அவரது கணவர் செந்தில்குமார் வரு மான வரித்துறையில் அதிகாரி யாக பணியாற்றி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

10 hours ago

தமிழகம்

2 mins ago

சுற்றுலா

24 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

37 mins ago

உலகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

மேலும்