நாகை மாவட்டம் சீர்காழி அருகே விவசாயி மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.
சீர்காழியை அடுத்த ஆலாலசுந்த ரம் ஊராட்சி அழகியநத்தம் கிராமத் தைச் சேர்ந்தவர் நடராஜன்(62), விவசாயி. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இப்பகுதிக்கு வந்து சேராத நிலையில், பருவ மழையும் பொய்த்ததால், பம்புசெட் பாசனம் மூலம் விவசாயப் பணிகளை மேற்கொண்டிருந்தார். தற்போது இப்பகுதியில் நிலத்தடி நீரும் கீழே சென்றுவிட்டது.
இந்நிலையில், நேற்று காலை வயலுக்குச் சென்ற நடராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந் தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை இயக்கியபோது, அதில் தண்ணீர் வராத அதிர்ச்சியில், அவர் இறந்துவிட்டதாக சக விவசாயிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
கல்வி
5 hours ago
தமிழகம்
5 hours ago