மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக சுவரொட்டி: 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

கோவையில் மாவோயிஸ்ட் இயக் கத்தினருக்கு ஆதரவாக, உரிய அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் படுக்கா வனப்பகுதியில் கடந்த 24-ம் தேதி கேரள தண்டர் போல்ட் மற்றும் கூட்டு அதிரடிப் படையினருக்கும், தடை செய்யப் பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின ருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மாவோ யிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதைக் கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் சிலர் சுவரொட்டி களை ஒட்டி வருவதாக போலீஸா ருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சுவரொட்டிகளை ஒட்டியதாக 2 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணை யில், அவர்கள் இருவரும் புலிய குளத்தைச் சேர்ந்த தினேஷ்(26), உக்கடம் பகுதியைச் சேர்ந்த பார்த் திபன்(27) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்து, ஜாமீனில் விடுவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்