தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசு சுரங்கத் துறையில் உதவி செயலாளராக பணியாற்றி வந்த ஜானி டாம் வர்க்கீஸ் கடலூர் மாவட்ட உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுடெல்லியில் உள்ள நிதி ஆயோக்கில் உதவி செயலாளராக பணியாற்றி வந்த வி.பி.ஜெயசீலன், செங்கல் பட்டு சார் ஆட்சியராகவும், மத்திய கார்ப்பரேட் விவகாரத் துறையில் உதவி செயலாளராக பணியாற்றி வந்த தீபக் ஜேக்கப், தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய நீதித்துறையில் உதவி செயலாளராக பணியாற்றி வந்த பி.ஆகாஷ், திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியராகவும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் உதவி செயலாளராக பணியாற்றி வந்த கே.பி.கார்த்திகேயன், திருப்பத்தூர் சார் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் உதவி செயலாளராக பணியாற்றி வந்த கிளி சந்திரசேகர், மதுராந்தகம் சார் ஆட்சியராகவும், மத்திய மனிதவள மேம்பாட்டு துறையில் உதவி செயலாளராக பணியாற்றி வந்த எம்.பிரதீப் குமார், கும்பகோணம் சார் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பஞ்சாயத்து ராஜ் துறையில் உதவி செயலாளராக பணியாற்றி வந்த கிரேஸ் லால்ரிந்திகி பச்சாவ், தாராபுரம் உதவி ஆட்சியராகவும், மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறையில் உதவி செயலாளராக பணியாற்றி வந்த ஷ்ரவண் குமார் ஜட்டாவத், திருப்பூர் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், தமிழக தேர்தல் அலுவலக இணை தலைமை தேர்தல் அதிகாரியாக (தொழில்நுட்பம்) பணியாற்றி வந்த அஜய் யாதவ் மத்திய வர்த்தக துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
இந்தியா
39 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
58 mins ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago