ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கான பேச்சுவார்த்தை டெல்லியில் நவம்பர் 2-ம் தேதி (நேற்று) ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்களில் முனுசாமி, ராஜேந்திரன், ராமர், மற்றொரு முனுசாமி ஆகியோரை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சிலரை விரட்டி அடித்துள்ளனர்.
ஒருபுறம் பேச்சுவார்த்தை, மறுபுறம் கைது நடவடிக்கை என்று இலங்கை அரசு கபட நாடகம் ஆடுவது அப்பட்டமாக வெளிப் பட்டுள்ளது. தமிழக மீனவர்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக் கைகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதே பிரச்சினை தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ராமேசு வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 1-ம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் மீன்களையும், படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், மீனவர்களையும் கைது செய்துள்ளனர். இது மிகவும் கண்டிக் கத்தக்கது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசும் ஈடுபடவில்லை.
இலங்கை கடற்படையின் இச்செயலை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பெற்றுத்தரவும், கச்சத்தீவுப் பகுதியில் இந்தியாவின் அனுமதியைப் பெறாமல் எந்த ஒரு நடவடிக்கையும் இலங்கை அரசு எடுக்கக்கூடாது என்றும் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
வலைஞர் பக்கம்
48 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
3 hours ago