சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில், தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த முளைகிரிபட்டு கிராமத்தில் கருப்பு கொடியுடன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து பல்வேறு கட்டப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக 8 வழிச்சாலை திட்டம் குறித்த பேச்சு மற்றும் கருத்து ஆகியவை மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து எழவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஆதரவான கருத்து தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த 5 மாவட்ட விவசாயிகள், 8 வழிச்சாலையை எதிர்த்து போராட்ட களத்தில் மீண்டும் இறங்கி யுள்ளனர். 8 வழிச்சாலை திட்டத்தில், 47 சதவீத சாலை யானது திருவண்ணாமலை மாவட்டத்தில் அமையவுள்ளதால், போராட்டத்தை விவசாயிகள் தொடர்கின்றனர்.
சேத்துப்பட்டு அடுத்த ஆத்துறை, செங்கம் அடுத்த பெரும்பட்டம் ஆகிய கிராமங்களில் கடந்த மாதம் 28-ம் தேதி கருப்பு கொடியுடன் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, செய்யாறு அடுத்த முளைகிரிபட்டு கிராமத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க இணை ஒருங்கிணைப்பாளர் தேவன் தலைமை வகித்தார். கருப்பு கொடி ஏந்தி கால்நடைகளுடன் போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள், 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும், இத்திட்டத்தை நிறைவேற்ற மாட் டோம் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என முழக்கமிட்டனர். இதில், நிர்வாகிகள் சுந்தரி, பச்சையப்பன், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஆன்மிகம்
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago