தமிழக அரசின் பெரியார் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை, சிறப்பு செய்ய பெரியார் விருது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதை பெறுவோருக்கு ரூ.ஒரு லட்சம் பொற்கிழியும், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான தமிழக அரசின் பெரியார் விருது பெறுவதற்கான உரிய விருதாளர் தேர்வு செய்யப்படுகிறார். எனவே சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள், அவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சீர் மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு அடைய எடுத்துக் கொண்ட முயற்சிகள், அம்மக்ளின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொண்ட பணிகள், கடந்தாண்டுகளில்அவர்கள் மேற்கொண்ட பணிகள் விவரம் அளிக்க வேண்டும்.
இந்த விவரங்களுடன் பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் வரும் நவம்பர் 10-ம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago