சென்னையில் செயல்பட்டுவரும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வுக்கு 9 நாட்கள் தசரா விடுமுறை விடப்பட்டுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு சென்னை அரும்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் இரு அமர்வுகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர் நாடகா, கேரளா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எதிரான 1000-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அமர்வு களுக்கு தசரா பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.8) முதல் 16-ம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை விடப் பட்டுள்ளது. இந்த நாட்களில் இரு அமர்வுகளும் இயங்காது. விடுமுறை கால நீதிமன்றமும் திறக்கப்படாது என்று பசுமை தீர்ப்பாய அலுவலகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
38 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
3 hours ago
சுற்றுலா
3 hours ago