கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகள், திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு கோவை வந்தார். இன்று முதல் 3 நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன், கயல்விழி செல்வராஜ், சு.முத்துசாமி, உயரதிகாரிகள் வரவேற்றனர்.
கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (24-ம் தேதி) காலை 10.30 மணிக்கு ஈச்சனாரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடக்கும் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் பேசுகிறார். அதன் பின்னர், திருப்பூருக்கு முதல்வர் புறப்பட்டுச் சென்று அங்கு தங்குகிறார்.
நாளை காலை 10 மணிக்கு திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியிலும் பின்னர் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபடுகிறார்.
அதைத் தொடர்ந்து, அங்கிருந்து மதியம் 1 மணிக்கு கோபிசெட்டிப் பாளையத்துக்கு முதல்வர் புறப்பட்டுச் செல்கிறார். அங்குள்ள கள்ளிப்பட்டியில் நாளை மாலை 5 மணிக்கு நடக்கும் கட்சி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு ஈரோட்டுக்கு செல்லும் முதல்வர் அன்றிரவு அங்கு தங்குகிறார்.
மறுநாள் 26-ம் தேதி காலை 10.45 மணிக்கு பெருந்துறையில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். மீண்டும் கோவைக்கு வரும் முதல்வர் அன்று மாலை 5 மணிக்கு, பீளமேடு பிஎஸ்ஜி கல்லூரியின் பவளவிழா நிகழ்ச்சியில் பேசுகிறார்.தொடர்ந்து இரவு 8.35 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
உலகம்
1 min ago
வணிகம்
17 mins ago
வாழ்வியல்
13 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
ஆன்மிகம்
31 mins ago
விளையாட்டு
36 mins ago
கருத்துப் பேழை
5 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago