பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு மாதமும் 9-ம் தேதி மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் நேற்று கூறியதாவது: மருத்துவர்கள் ஒவ்வொரு மாதத்திலும் ஒருநாள் இலவசமாக மருத்துவ சேவை ஆற்ற வேண்டுமென பிரதமர் மோடி அறி வுறுத்தியுள்ளார். அதன்படி, எங்களது குழுமத்தின் கீழ் நாட்டில் உள்ள 64 மருத்துவனைகள் மூலம் அந்தந்த மாநில அரசுகளின் வழிகாட்டுதலுடன் சிறப்பு முகாம்கள் நடத்தவுள்ளோம். ஒவ்வொரு மாதமும் 9-ம் தேதி நடத்தப்படும் இந்த முகாமில் எங்களது 9 ஆயிரம் மருத்துவர்களும் பங்கேற்று இலவச மருத்துவ சேவை அளிப்பார்கள். இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண் ணிக்கை 65 மில்லியனையும் தாண்டியுள்ளது. இதேபோல், புற்றுநோய், இதய நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு தற்போதுள்ள உணவு முறையும் முக்கியமான காரணமாக இருக்கிறது. எனவே, இதுபோன்ற மருத்துவ முகாம்கள் மூலம் நோய்களை முன்கூட்டியே தடுக்க முடியும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
இலக்கியம்
5 hours ago
தமிழகம்
27 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago