இந்து முன்னணி நிர்வாகி கொலையில் 4 பேர் சரண்?

By செய்திப்பிரிவு

இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கொலை வழக்கில் 4 பேர் பெங்களூர் நீதி மன்றத்தில் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட் டம் அம்பத்தூர் மண்ணூர்பேட் டையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இந்து முன்னணி அமைப்பின் திருவள்ளூர் மாவட்ட தலைவராக இருந்து வந்தார். இவரை கடந்த 19-ம் தேதி இரு பைக்குகளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அலுவலக வாசலில் வைத்து வெட்டிக்கொன்றது. தடுக்க முயன்ற உதவியாளர் ரவிக்கும் வெட்டு விழுந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொலையாளிகளைப் பிடிக்க 10 தனிப்படை அமைத்து போலீ ஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இதன் ஒருபகுதி யாக கொலை நடந்த சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 7 கண்காணிப்பு கேரமாவில் பதிவான உருவங்களை வைத்து போலீஸார் 16 பேரை பிடித்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலை யில் சுரேஷ்குமாரை கொலை செய் ததாக பெங்களூர் நீதிமன்றத்தில் 4 பேர் செவ்வாய்க்கிழமை மாலை சரண் அடைந்ததாகவும், அவர் களை கைது செய்து சென்னை கொண்டு வர போலீஸார் நட வடிக்கை மேற்கொண்டுள்ளதாக வும் தகவல்கள் பரவின.

இதனிடையே இவர்கள் 4 பேரும் புதன்கிழமை பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

39 mins ago

சினிமா

59 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

35 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்