மீன்பிடி தடைக் காலம் இன்றுடன் நிறைவு: நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்கின்றனர்

By செய்திப்பிரிவு

45 நாட்கள் மீன்பிடித் தடைக் காலம் நிறைவடைந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவில் இருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதி களான வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதிகளில் மீன்பிடித் தடைக் காலம், கடந்த ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து மே 29-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, இன்றுடன் தடைக் காலம் நிறைவடைகிறது.

முன்னதாக, இந்தத் தடைக் காலத்தில் தங்களது விசைப்படகு களை மராமத்து செய்யவும், வலைகளைப் பழுதுபார்க்கவும் மீனவர்கள் பயன்படுத்தினர்.

படகுகளில் டீசல் கேன்கள், ஐஸ் கட்டிகள், வலைகளை ஏற்றிக் கொண்டு ராமேசுவரம் விசைப் படகு மீனவர்களும் தமிழகத்தின் 13 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற் பட்ட மீனவர்களும் 15,000-க்கும் மேற்பட்ட படகுகளில் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவில் கடலுக்குச் செல்ல உள்ளனர்.

கடந்த ஒன்றரை மாதங்களாக வருமானம் இன்றி தவித்த நிலை யில், மீன்பிடித் தடைக் காலத்தில் உற்பத்தி அதிகரித்து அதிக மீன்பாடு கிடைக்கும் என்ற நம்பிக் கையில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வருகிற செவ்வாய்க் கிழமை அதிகாலையில் இருந்து கரைக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இந்திய எல்லையைத் தாண்டி யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என தமிழக மீன்வளத்துறை அதிகாரி கள் எச்சரித்துள்ளனர்.

சென்னையில்

நேற்று காசிமேட்டில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கான ஆயத் தப் பணிகளில் ஈடுபட்டனர். படகுகளில் ஐஸ் கட்டிகள், டீசல் கேன்கள், வலைகள் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த மீன்பிடித் தடைக் காலம் காரணமாக கடந்த ஒரு மாதமாக மீன்களின் வரத்து குறைந்து விலை அதிகரித்திருந்தது. இந்நிலை யில், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல உள்ளதால் வரும் நாட்களில் மீன்களின் விலை குறை யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்