மை மாற்றம் செய்யப்பட்டதால் ஆர்.கே.நகரின் 11 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும்: விசிக வேட்பாளர் வசந்தி தேவி கோரிக்கை

By செய்திப்பிரிவு

மை மாற்றம் செய்யப்பட்டதால் சென்னை ஆர்.கே.நகரில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று அத்தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வசந்தி தேவி கூறியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக் குட்பட்ட மாநகராட்சியின் 38-வது வார்டு, இசிஐ மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலை 10 மணியளவில் வாக்காளர் களுக்கு இடப்படும் மை மாற்றப்பட்டிருந்தது. இது தொடர்பான தகவல் கிடைக்கவே, நாங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்தோம்.

இதையடுத்து துணை தேர்தல் நடத்தும் அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து மாற்றப்பட்ட மையை எடுத்துவிட்டு பழைய மையை வைத்தார். காலையில் மின்வெட்டு ஏற்பட்ட போதுதான் இது நடந்திருக்க வேண்டும். அந்தப்பள்ளியில் சுமார் 11 வாக்குச்சாவடிகள் இருந்தன. அந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்