திமுக தேர்தல் அறிக்கையை நகலெடுத்து அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த தேர்தலில் அதிமுக அரசு செயல்படுத்திய இலவச திட்டங்களால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மேலும் பல இலவச வாக்குறுதிகளை அதிமுக அளித்துள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியானதும் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், மிகவும் கால தாமதாகவே தேர்தலுக்கு சில நாள்களே இருக்கும் நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையை நகலெடுத்து அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
சாத்தியம் இல்லாத சில இலவச அறிவிப்புகள் தவிர கூடுதலாக அதில் வேறு எந்த புதிய திட்டமும் இல்லை. இலவச வாக்குறுதிகளாலும் பணபலத்தாலும் எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என ஜெயலலிதா கனவு காண்கிறார். அவரது பகல் கனவு ஒருபோதும் நனவாகாது.
தமிழ்ச் சமுதாயமும், திராவிட சமுதாயமும் வாழ வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும் என்பது எனது லட்சியம். தமிழ்ச் சமுதாயம் வாழ பெரியார், அண்ணா கண்ட கனவுகளை நனவாக்கவே நான் பாடுபட்டு வருகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago