தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

தமிழகம், புதுச்சேரியில் புதன்கிழமை ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெப்பத் தாக்குதல் குறைந்தபாடில்லை. இன்று அதிகபட்சமாக திருத்தணியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அதேநேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இன்று அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் கல்லணையில் 60 மில்லி மீட்டர் மழை பதிவானது.

கோத்தகிரி 50 மி.மீ., லால்குடி 40 மி.மீ., வாழப்பாடி, நடுவட்டம், நிலக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ., திருக்காட்டுப்பள்ளி, ஏற்காடு, ஊத்தங்கரை, திருச்சி விமான நிலையம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.

“அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

10 hours ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

14 mins ago

சுற்றுலா

36 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

49 mins ago

உலகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்