தமிழகம், புதுச்சேரி மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: நடிகை நக்மா கருத்து

By செய்திப்பிரிவு

ஆளுகின்ற அரசின் செயல் பாடுகளால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் கொதிப் படைந்துள்ளனர் என அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நடிகை நக்மா கூறியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக புதுச்சேரிக்கு நேற்று வந்த நடிகை நக்மா, நிருபர்களிடம் கூறியது:

தமிழகத்தில் அதிமுக, புதுச் சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் அரசுகளின் செயல்பாடுகளால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். வெள்ள பாதிப்பின்போது தமிழகத்தில் வழங்குவதாக கூறப்பட்ட ரூ.5 ஆயிரம் தொகையைக் கூட அதிமுக அரசு முழுமையாக வழங்கவில்லை.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி கடந்த தேர்தலின் போதும் வாஷிங் மெஷின் தரப்படும் என்று அறிவித்தார். ஆனால் தரவில்லை. தற்போது அதே வாக்குறுதியை மீண்டும் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். காங்கிரஸ் - திமுக கூட்டணி சிறப்பான வெற்றியை பெறும்.

மத்திய பாஜக அரசு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியது. ஆனால் இதுவரை 1 லட்சம் பேருக்கு கூட வேலை தரவில்லை. தலைமைக்கு கட்டுப்பட்டவள் நான். கட்சித் தலைமை கூறினால்தான் தேர்தலில் போட்டியிடுவேன் நானாக போட்டியிட வாய்ப்பு கேட்கவில்லை என்றார்.

இதனையெடுத்து ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட சின்னையா புரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமிநாராயணன் எம்எல்ஏவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்