மண்டபத்தில் எழுப்பப்பட்ட 'எடப்பாடியார் வாழ்க' கோஷம்: அமைதிப்படுத்திய முன்னாள் அமைச்சர்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ள கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள், எடப்பாடியார் வாழ்க என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அங்கிருந்து முன்னாள் அமைச்சர்கள் பொதுக்குழு உறுப்பினர்களை அமைதிகாக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

இபிஎஸ் வாழ்க கோஷம்: பொதுக்குழுவில் கலந்துகொள்ள வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டபத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் எழுந்து நின்று எடப்பாடியார் வாழ்க என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

அமைதிப்படுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்: அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள், வளர்மதி, ஆர்.பி.உதயகுமார் மற்றும் வைகைச்செல்வன் பொதுக்குழு உறு்பபினர்களை அமைதிகாக்குமாறு கேட்டுக்கொண்டனர். இருப்பினும்,

ஆலோசனை அறையில் காத்திருப்பு: பொதுக்குழுக் கூட்டத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் விழா மேடைக்கு செல்லவில்லை. மண்டபத்தில் உள்ள ஒரு அறையில் அமர்ந்திருக்கிறார்.

வரவேற்பு இல்லை: பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த கட்சியின் மூத்த உறுப்பினர்கள் யாரும் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்கவில்லை. அவருடன் வருகை தந்திருந்த வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோர் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்துடன் வந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்