ரயில்கள் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை: திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்

By செய்திப்பிரிவு

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி குமார் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியது:

திகரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்சேவைகள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கரோனாவின்போது நிறுத்தப்பட்ட அனைத்து ரயில் சேவைகளையும் உடனே இயக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம்-புதுச்சேரி, விழுப்புரம்-சென்னை போன்ற பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்குவதற்கான தேவைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். விழுப்புரம் -காட்பாடி இடையே இரட்டை ரயில்பாதை அமைக்க ஆய்வு நடைபெற்று வருகிறது.

தற்போதைய இருப்பு பாதையின் திறனைக் கணக்கில் கொண்டு,ரயில்களின் வேகத்தை அதிகரித்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேகத்தை சற்று அதிகரிப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான ரயில்களை இயக்க முடியும்‌ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்