மின்துறையில் ரூ.13,040 கோடி உட்பட 31 பொதுத்துறை நிறுவனங்களில் ரூ.18,630 கோடி இழப்பு: சிஏஜி அறிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மின்துறையின் 3 நிறுவனங்களில் ரூ.13,040.40 கோடி உட்பட, 31 பொதுத் துறை நிறுவனங்களில் கடந்த 2019-20ல் ரூ.18,629.83 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக தணிக்கைத் துறை தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் என 77 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதில் 5 நிறுவனங்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை. மீதமுள்ள நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பாக, இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் கடந்த 2019-20-ம் ஆண்டுக்கான கணக்குகள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் 63 பொதுத் துறை நிறுவனங்களில் கடந்த 2019-20-ம் ஆண்டில் 31 நிறுவனங்களில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் கடந்த 2018-19ல் ரூ.17,799.23 கோடியாக இருந்த நிலையில், 2019-20ல் ரூ.18,629.83 கோடியாக இழப்பு உயர்ந்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த இழப்பில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய 3 நிறுவனங்களால் மட்டும், ரூ.13,04.40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்பு ரூ.11,964.93 கோடியாகவும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக்கழகத்தின் இழப்பு ரூ.1,074.48 கோடியாகவும் இருந்தது.

போக்குவரத்துக் கழகங்கள்

இது தவிர, 8 போக்குவரத்துக்கழகங்கள் மூலம் ரூ.5,230.58 கோடி இழப்பு ஏற்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் ரூ.898.82 கோடி இழப்பை சந்தித்திருந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

18 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்