தமிழகத்தில் அண்ணா விரும்பிய கூட்டணி ஆட்சி மலரும் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
6 தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து விஜயகாந்த் பேசியதாவது:
சட்டப்பேரவை தேர்தலில் 6 கட்சிகளை கொண்ட அணியாக நாங்கள் போட்டியிடுகிறோம். ஆறுமுக அணிக்கு இனி ஏறு முகம் தான். அதிமுக, திமுகவுக்கு மீண்டும் வாக்களிக்கக் கூடாது. தமிழகத்தை சீரழித்துவிடுவார்கள். தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை எனக் கூறுகின்றனர். ஆனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.
முதல் முறையாக ஒட்டப்பிடாரம் வந்துள்ளேன். மீண்டும் இங்கு வருவேன். உளுந்தூர்பேட்டைக்கு இணையாக ஒட்டப்பிடாரத்தை மாற்றுவேன். எங்கள் வெற்றியின் மூலம் தமிழகத்தில் முதல் முறையாக அண்ணா விரும்பிய கூட்டணி ஆட்சி மலரும் என்றார் விஜயகாந்த்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago