கூட்டணி ஆட்சி மலரும்: விஜயகாந்த் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் அண்ணா விரும்பிய கூட்டணி ஆட்சி மலரும் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

6 தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து விஜயகாந்த் பேசியதாவது:

சட்டப்பேரவை தேர்தலில் 6 கட்சிகளை கொண்ட அணியாக நாங்கள் போட்டியிடுகிறோம். ஆறுமுக அணிக்கு இனி ஏறு முகம் தான். அதிமுக, திமுகவுக்கு மீண்டும் வாக்களிக்கக் கூடாது. தமிழகத்தை சீரழித்துவிடுவார்கள். தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை எனக் கூறுகின்றனர். ஆனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

முதல் முறையாக ஒட்டப்பிடாரம் வந்துள்ளேன். மீண்டும் இங்கு வருவேன். உளுந்தூர்பேட்டைக்கு இணையாக ஒட்டப்பிடாரத்தை மாற்றுவேன். எங்கள் வெற்றியின் மூலம் தமிழகத்தில் முதல் முறையாக அண்ணா விரும்பிய கூட்டணி ஆட்சி மலரும் என்றார் விஜயகாந்த்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்