இளையராஜா குறித்து அவதூறு கருத்து: ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது புகார்

By செய்திப்பிரிவு

சென்னை: இளையராஜா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது புரட்சித் தமிழகம் சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புரட்சி தமிழகம் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாகத் தெரிவித்து, பலரும் இளையராஜாவை விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.

இந்நிலையில், இளையராஜா குறித்து, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அவதூறான முறையில் கருத்து தெரிவித்துள்ளார். எனவே, அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்