பஞ்சாயத்து ராஜ் தினம்: மநீம நிர்வாகிகளுடன் இணையவழியில் கமல் இன்று உரை

By செய்திப்பிரிவு

சென்னை: தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆன்லைனில் உரையாற்றுகிறார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை:

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான இன்று (ஏப்.24) தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதிகாரங்களை பரவலாக்கும் பஞ்சாயத்து ராஜ் சட்டம் குறித்தும், கிராம சபைகள் குறித்தும் பரவலான விழிப்புணர்வை கொண்டுவந்து, கிராம சபை கூட்டங்களில் மக்கள் பங்கேற்பை அதிகப்படுத்தியதில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் அளப்பரிய பங்களிப்பு தமிழகம் அறிந்ததே.

மாதிரி கிராம சபை கூட்டங்கள் நடத்தி, கிராம சபை கூட்டங்களில் நேரடியாக பங்கேற்று, கிராம சபைகளின் உரிமைகளுக்காக கமல்ஹாசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவர், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்.24-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு இணையவழியில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். அவரது தலைமையில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், மக்கள் ஆகியோர் கிராம வளர்ச்சிக்கான உறுதிமொழியும் ஏற்றுக்கொள்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

சுற்றுச்சூழல்

7 mins ago

இந்தியா

6 mins ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

29 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

40 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

47 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

மேலும்