சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாள்வதில் ஏற்படும் காலதாமதம் குறித்து மத்திய சுங்கத் துறை இணை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை சுங்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து மத்திய சுங்கத் துறை இணை செயலாளர் சத்ய னிவாஸ் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்திய துறைமுக கூட்டமைப்பின் மேலாண்மை இயக்குநர் என்.முருகானந்தம், சுங்கத் துறை அதிகாரிகள், சென்னை துறைமுக அதிகாரிகள் மற்றும் சுங்கத் துறை ஏஜென்ட்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள், துறைமுக பங்குதாரர்கள் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதில் ஏற்படும் காலதாமதம் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சென்னை சுங்கத்துறை ஏஜென்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் கே.வி.வி.கிரி பேசும்போது, சென்னை துறைமுகத்துக்கு உள்ளே உள்ள சிசிடிஎல், சிஐடிபிஎல் ஆகிய கன்டெய்னர் முனையங்களில் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் துறைமுகத்துக்குள் சரக்குகளை உள்வாங்கும் திறன் குறைவாக உள்ளது. இதனால் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என தெரிவித்தார்.
அதை சுங்கத் துறை அதிகாரிகள் ஆமோதித்தனர். மேலும், துறைமுகத்துக்குள் கன்டெய்னர்களை கையாள் வதில் செயற்கையான நெரிசல் ஏற்படுத்தப்படுவதையும் இந்த ஆய்வில் மத்திய சுங்கத் துறை இணை செயலாளர் அறிந்துகொண்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
விளையாட்டு
55 mins ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago
ஓடிடி களம்
4 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago