மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு தனதாக்கிக் கொள்ள முயல்கிறது: பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு தனதாக்கிக் கொள்ள முயல்கிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நிருபர்களை இன்று சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

தமிழக அரசு அமல்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு தான் பெருமளவில் நிதி ஒதுக்குகிறது.

''தமிழகத்தின் நியாய விலைக் கடைகளில் ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் ஒரு கிலோ அரிசிக்கு மாநில அரசு ரூ.3 தான் வழங்குகிறது. ஆனால், மத்திய அரசு ரூ.32.66 வழங்குகிறது.

மத்திய அரசின் நிதியால் இலவச அரிசி வழங்கும் மாநில அரசு, அதனை அம்மா அரிசி என தமிழக அரசு முத்திரை குத்திக் கொள்கிறது. இத்தகைய அரசியலைத்தான் அதிமுக செய்கிறது. உண்மையில் அதனை பிரதமர் அரிசி என்று தான் அழைக்க வேண்டும்.

பாஜகவின் முழு வேட்பாளர் பட்டியல் 2 தினங்களில் வெளியாகும். தேர்தல் அறிக்கை ஒரு வாரத்தில் வெளியிடப்படும்'' என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்