ராமேசுவரம்: தமிழகத்தில் மீன்பிடித் தடைக் காலம் வரும் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது. 61 நாட் களுக்கு தமிழகத்திலுள்ள 15,000 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது.
தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண் டறிந்துள்ளது.
மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில், இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப் படுகிறது. அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15-ம் தேதி அமலுக்கு வருகிறது. ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும்.
இந்த தடைக்காலத்தில் தமிழ கத்திலுள்ள 15,000 விசைப்படகு களும் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி நங்கூரமிடப்பட்டிருக்கும். மேலும் இந்த 61 நாட்களை மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைக்கப் பயன்படுத்திக் கொள்வர்.
இது குறித்து மீனவளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தைப்பாதுகாத்திடும் பொருட்டும், 2022-ம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை யிலுமான இரண்டு மாத காலம் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை உபயோகப்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய தமிழகத்தின் 14 கடற்கரை மாவட் டங்களைச் சேர்ந்த விசைப்படகுகள் மற் றும் இழுவைப்படகுகளைப் பயன்படுத்தி இக்காலத்தில் கட லுக்குள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது. மேலும் தடைக்கால நிவாரணத்தொகை ரூ.5 ஆயிரத் திலிருந்து ரூ.6 ஆயிரமாக இந்த ஆண்டு உயர்த்தப்பட்டு வழங்கப் பட உள்ளது, என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
23 mins ago
விளையாட்டு
58 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
2 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
53 mins ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago