அரசியல் கட்சிகளின் வேண்டுகோளின் படி, தமிழகத்தில் பணப்பட்டு வாடாவை கண்காணிக்க, தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளர் கள் நேற்று வந்தனர். ஒதுக்கப் பட்ட மாவட்டங்களில் இன்று முதல் பணிகளை தொடங்குகின்றனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 27 நாட்கள் உள்ளன. வாக்குப் பதிவு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வரும் தமிழக தேர்தல் துறை, தற்போது வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
முன்னதாக, தமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையரிடம், பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் அறிவுறுத்தின. இதன் அடிப்படையில், செலவின சிறப்பு பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தமிழகம், புதுச்சேரிக்கு 12 தேர்தல் பார்வை யாளர்கள் நேற்று வந்தனர். இதில், சென்னைக்கு 4 பார்வையாளர்கள் வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
அரசியல் கட்சிகளின் கோரிக்கை யின்படி, தேர்தல் செலவினம் தொடர் பாக கண்காணிக்க, 12 பார்வை யாளர்கள் இன்று (நேற்று) தமிழகம் வந்துள்ளனர். சென்னைக்கு வரும் பார்வையாளர்களான, பிரசன்ஜித் சிங், சஞ்ஜிவ், ராஜிவ் சின்கா, பி.வி.ராவ் ஆகியோர் சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப் புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பார்வையாளர்களாக செயல்படு கின்றனர். இவர்களுக்கு தலா 2 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள், நாளை (இன்று) சென்னை வந்து ஆலோசனை நடத்தி விட்டு மாவட்டங்களுக்கு செல்கின்ற னர். மற்ற தொகுதிகளுக்கான செலவின பார்வையாளர்கள் 22-ம் தேதி முதல் வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
37 mins ago
விளையாட்டு
28 mins ago
தமிழகம்
52 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago