ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக் கப் பட்டுள்ள கா.பாண்டியராஜன் நேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக தேமுதிக வில் இருந்து விலகிய கா.பாண்டிய ராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். திருமுல்லைவாயலில் உள்ள பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோயிலில் இருந்து அவர் நேற்று காலை 11 மணிக்கு தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
முன்னதாக, ஆவடியை அடுத்த கவரப்பாளையத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. பிற்பகலில் தனியார் மண்டபத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆவடி தொகுதியின் தற்போ தைய எம்எல்ஏவும், மாநில பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சரு மான அப்துல் ரஹீம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் அதிமுக வேட்பாளர் கா.பாண்டியராஜன் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
க்ரைம்
10 mins ago
இந்தியா
19 mins ago
விளையாட்டு
20 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
வாழ்வியல்
10 hours ago