முதல்வர், திமுக, விசிகவினர் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக பேசிய இளைஞர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் முகமது பாரூக் மகன் அப்துல் வாஹிப் (28). பொறியியல் பட்டதாரியான இவர், துபாயில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை முகமது பாரூக் பெரம்பலூர் மாவட்ட அதிமுக சிறுபான்மைப் பிரிவு நிர்வாகியாகவும், அக்கட்சியின் மேடைப் பேச்சாளராகவும் உள்ளார்.

மார்ச் 8-ம் தேதி சொந்த ஊருக்கு வந்த வாஹிப்க்கு, மார்ச் 13-ம் தேதி தொழுதூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து, மார்ச் 18-ல் திருச்சி வழியாக துபாய் சென்றுவிட்டார். இந்நிலையில், அப்துல் வாஹிப் அண்மையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவினரையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசிய வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பியிருக்கிறார்.

இதுகுறித்து திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் அப்துல் கரீம்(38) அளித்த புகாரின்பேரில், அப்துல் வாஹிப் மீது பெரம்பலூர் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

51 mins ago

ஜோதிடம்

54 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்