தமிழக பட்ஜெட் 2022-23: விழுப்புரம், ராமநாதபுரத்தில் புதிய அரசு அருங்காட்சியகங்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பொது பட்ஜெட் 2022-23-ஐ சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அறிவிப்புகள்: > விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும்.

> தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழங்குடியினர் அகழ்வைப்பகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ள தொல் பழங்கால அகழ்வைப்பகம், தருமபுரியில் உள்ள நடுகற்கள் அகழ்வைப்பகம் ஆகியவை ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

> மாநிலத்தில் உள்ள பழமையான பொதுக் கட்டடங்களை அவற்றின் தனித்துவம் மாறாமல் புனரமைத்து, பாதுகாக்கும் பொருட்டு, இக் கட்டடங்களுக்கு இவ்வாண்டு சிறப்பு ஒதுக்கீடாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> இம்மதிப்பீடுகளில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்