ரஜினி ரசிகர்கள் ஆத்திரம்: விஜயகாந்த்துக்கு எதிராக போராட்டம்

By செய்திப்பிரிவு

கொடுங்கையூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் துக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது, “அரசியலுக்கு வருவதற்கு நடிகர் ரஜினிகாந்தை போல நான் பயப்படவில்லை” என்று பேசினார். இது ரஜினி ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் விஜயகாந்த்துக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் காலனியில் நேற்று மாலையில் ஒன்று கூடிய ரஜினி ரசிகர்கள் விஜயகாந்த்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் உருவ பொம்மையை நடு ரோட்டில் போட்டு தீயிட்டு கொளுத்தினர்.

கொடுங்கையூர் போலீஸார் விரைந்து வந்து தீயில் எரிந்து கொண்டிருந்த பொம்மையை அணைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்