இந்த தேர்தலில், பெண் ஊழியர்களுக்கு அவர்கள் வசிக்கும் தொகுதிக்கு அருகில் உள்ள தொகுதிகளில் தேர்தல் பணி வழங்கப்படுகிறது என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர் தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடக்கிறது. தேர்தலை நடத்தி முடிக்க, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் என 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்களை தேர்தல் துறை பயன்படுத்துகிறது.
இந்த தேர்தலில் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் 3 லட் சத்து 3 ஆயிரம், காவல் துறை யினர் 1 லட்சம் பேர் பயன்படுத் தப்படுகின்றனர். தேர்தல் நட வடிக்கை தொடங்கப்பட்டதும், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து, தேர்தல் பணியாளர்களில் பெண் களுக்கு தொலை தூரத்தில் பணி வழங்கக்கூடாது; வசதிகளை செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், வரும் 24-ம் தேதி தேர்தல் அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வழங்கப்படு கிறது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
இந்த தேர்தலில் பெண் தேர்தல் அலுவலர்களுக்கு அவர்கள் வசிக்கும் தொகுதிக்கு அருகில் உள்ள தொகுதிகளில் பணி வழங்கும் வகையில், புதிய மென் பொருள் பயன்படுத்தப்படுகிறது. பணி வழங்கப்பட்டவர்கள் தவிர மீதமுள்ளவர்கள், காத்திருப்பில் வைக்கப்படுவர்.
தபால் வாக்கை பொறுத்த வரை, மே 4 அல்லது 5-ம் தேதி அவர்களுக்கான படிவங்கள் வழங்கப்பட்டுவிடும். அந்த படி வங்களை பூர்த்தி செய்து, அவர் கள் வசிக்கும் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரி அலு வலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் வாக்கு எண்ணிக் கைக்கு முதல்நாளான மே 18-ம் தேதி வரை போடலாம். அல்லது படிவத்தில் அளிக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபாலிலும் அனுப்ப லாம். இந்த முறை, தேர்தல் பணி களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் ஓட்டுநர்கள், கிளீனர்கள், வீடியோகிராபர்கள் என 70 ஆயிரம் பேருக்கும் தபால் வாக்கு வசதி செய்யப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 mins ago
இந்தியா
13 mins ago
விளையாட்டு
14 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
வாழ்வியல்
10 hours ago
தமிழகம்
11 hours ago