உழவர் உழைப்பாளர் கட்சி திமுகவுக்கு ஆதரவு

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக, உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திருப்பூரில் நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிக்க, கட்சியின் செயற்குழு முடிவு செய்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில், தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல், இந்த தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன் ரத்து, நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 500, கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரத்து 500 வழங்கப்படும் என்பன உட்பட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், திமுகவுக்கு ஆதரவளிக்க முடிவு செய் துள்ளோம். அனைத்து விவசாயிகளுக்கான பயிர்க் கடன்களை ரத்து செய்ய வேண்டுமென, திமுகவின் தேர்தல் அறிக்கையில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்த உள்ளோம். அன்னூர் வேப்பம்பள்ளம்புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமசாமி, வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். எனவே, மத்திய, மாநில அரசுகள், சம்பந்தப்பட்ட விவசாயியின் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்து, அவரது குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

ஜோதிடம்

38 mins ago

ஜோதிடம்

53 mins ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்