விருத்தாசலத்தில் திமுக வேட்பாளர் மாற்றம்: எதிர்ப்பு தெரிவித்து இருவர் தீக்குளிக்க முயற்சி

By என்.முருகவேல்

விருத்தாசலத்தில் திமுக வேட்பாளர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியைச் சேர்ந்த இருவர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருத்தாசலம் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த தங்க.ஆனந்தன் இன்று மாலை திடீரென மாற்றப்பட்டு, அவருக்கு மாற்றாக நல்லூர் ஒன்றியச் செயலாளர் பாவாடை கோவிந்தசாமி புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனிடையே இன்று மாலை கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், திட்டக்குடியை அடுத்து விருத்தாசலத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.வேட்பாளர் மாற்றத்தை அறிந்த அவர் விருத்தாசலம் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு நெய்வேலித் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்த நிலையில் வேட்பாளரை திடீரென மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்த தங்க.ஆனந்தனின் ஆதரவாளர்கள் விருத்தாசலம் பாலக்கரை முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் வேட்பாளர் தங்க.ஆனந்தனும் கலந்துகொண்டார். அப்போது அக்கட்சியைச் சேர்ந்த இருவர் தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டனர். உடனிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். விருத்தாசலம் வேட்பாளர் மாற்றமும், மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடைபெறுவதால் அங்கு பரபரப்பு நிலவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்